330

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "எள்பய றொடுதண் டுலமிவை ஒளிதிகழ்
     கட்புலம் கொளவிர வியகாட் சியபோல்
     இரண்டிறந் தனவாய் இனிமையின் அணிபல
     திரண்டன சங்கீ ரணமெனச் செப்பினர்."                     - மா. 250 

    "சங்கீரணம் என்ப தரும்பல அணிவகை
     கொங்கீரத் தொடையெனக் கூட்டிக் கூறலே."            - தொ. வி. 368] 

     வரலாறு :

    "தண்துறைநீர் நின்ற தவத்தால், அளிமருவு
     புண்டரிகம், நின்வதனம் போன்றதால்; உண்டோ
     பயின்றார் உயிர்பருகும் பால்மொழியாய்! பார்மேல்
     முயன்றால் முடியாப் பொருள்."

     இதனுள், "தண்துறைநீர் நின்றதவம்" எனத் தற்குறிப் பேற்றமும், "தவத்தால்"
 எனக் கருமக்காரக ஏதுவும், "அளிமருவும்" எனச் சிலேடையும், "புண்டரிகம்
 நின் வதனம் போலு" என உவமையும், "உண்டோ முயன்றால் முடியாப்பொருள்"
 என வேற்றுப்பொருள் வைப்பும், "உயிர்பருகும்பால் மொழியாய்" எனச் சுவையும்
 விரவி வந்தவாறு காண்க. பிறவும் அன்ன.                                (63) 

     [பழகியவருடைய உயிரைப்பருகும் பால் போன்ற இனிய சொல்லை உடைய
 தலைவியே! தண்ணிய துறையில் நீரில் நின்று செய்த தவத்தினாலே வண்டுகள்
 மொய்க்கும் தாமரை கருணை பொருந்திய நின் முகம் போன்ற
 தோற்றமுடைத்தாயிற்று. இவ்வுலகில் முயற்சி செய்தால் அடையமுடியாத பொருளே
 இல்லை - என்ற இப்பாடலில்,

     பல அணிகளும் வந்துள்ளமை காண்க.]                               63