அணியியல் - பாவிகவணி
331
பாவிகவணி
683. பாவிகம் என்பது காப்பியப் பண்பே.
இது நிறுத்தமுறையானே பாவிக அலங்காரம் உணர்த்துகின்றது.
இ-ள் :பாவிகம் என்று சொல்லப்படுவது பொருள் தொடர்நிலைச் செய்யுள்திறத்துக் கவியால் கருதிச் செய்யப்படுவதோர் குணமாம். என்றவாறு.
அஃதாவது அத்தொடர்நிலைச்செய்யுள் முழுவதும் நோக்கிக் கொள்ளப்படுவது.
[ஒரே பாடலில் கொள்ளப்படும் ஏனைய அணிகளின் இது வேறாமாறு காண்க.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 91
"பாவிகமது நற்கவியின், ஒண்பொருளின் தொடர்காப்பிய முற்றின் உரைபெறுமால்." - வீ. 176
"விளம்பிய காப்பியக் குணங்கள்பா விகமே." - மா. 251]
வரலாறு :
"பிறன்இல் விழைவோர் கிளையொடும் கெடுப." "பொறையின் சிறந்த கவசம் இல்லை," "வாய்மையில் கடியதுஒர் வாளி இல்லை."
என வரும். இதனுள் என்பன போல்வன தோன்றக் கிடந்தவாறு காண்க. (64)
விளக்கம்
[என்பன போல்வன - இங்குக் குறிப்பிட்டவை போன்ற பொதுப் பண்புகள்.