அணியியல் - சொல்லணி - மடக்கு

339 

    "அந்த முதலாத் தொடுப்பது அந்தாதி
     மடக்காம் என்மனார் மறைஉணர்ந் தோரே."            - மு. வீ. சொ. 3 

    "அதுதான்
     ஓரடி முதலா நான்கடி காறும்
     சேரும் என்மனார் தெளிந்திசி னோரே,"               - மு. வீ. சொ. 5 

    "எழுத்தடி மொழியிடை யிட்டும் இடமாலும்
     மாறிமற் றொருபொருள் வந்து விளைவது
     மடக்காம் எனப்பெயர் வைக்கப் படுமே."               - மு. வீ. சொ.4] 

 எழுவகை மடக்கு

 686. ஆதி1, இடை2,கடை3, ஆதியோடு இடை4,கடை5,
      இடையொடு கடை6,முழுது7, எனஎழு வகைத்தே.

     இஃது அவ்வாற்றான் அத்துணைத்தாம் என்ற தனையே இவ்வாற்றான்
 இத்துணைத்தாம் என்கின்றது.

     இ-ள் :   முற்கூறிய மடக்கு ஆதிமடக்கும், இடை மடக்கும், கடைமடக்கும்,
 ஆதியோடு இடைமடக்கும் ஆதியோடு கடைமடக்கும் இடையொடு கடைமடக்கும்,
 முழுதும் மடக்கும் என எழுவகைப்படும் என்றவாறு.                       (67) 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும்- தண்டி 94 

    "ஆதியும் ஈறும்இடையும் அடிஒன்றி லேமடக்கும்
     ஓதிய பாதங்கள் நான்கினு மாம்ஒரு பாதமுற்றுந்
     தீதிய லாமை மடக்கலு முண்டு தெரிந்தவற்றைக்
     கோதிய லாமை விகற்பத் தினிலறி கோல்வளையே."           - வீ. 179 

    "ஒன்றா தியவாம் ஒருநான் களவும்
     சென்று நடைபெறும் சீர்த்ததற் கடியே."                     - மா. 254