34
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
விளக்கம்
செய்யுட்களை முத்தகம், குளகம் என்ற இருவகையாகப் பிரிக்கலாம். தொகைநிலைச் செய்யுட்கள் முத்தகச் செய்யுட்களாகவே அமையும். தொடர்நிலைச் செய்யுட்கள் முத்தகம், குளகம் என்ற இருவகைச் செய்யுளானும் அமையும் என்பதும் அறிக.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 2
"யாப்பை இயம்பிடில் முத்தகத் தோடு குளகம்தொகை காப்பியமாம்"
- வீ. 178
"ஆற்றல் அணிக்கண் அவைமுத் தகம்குளகம் தோற்றும் தொகையே தொடர்நிலையென் - றேற்புடைய"
- மா. 67
"தொகைநிலை குளகம்முத் தகம்தொடர் நிலையென செய்யுள்நால் வகைப்படும் செப்புங் காலே"
- மு. வீ. செய்யுளணி 1
முத்தகச் செய்யுள்
623. அவற்றுள், முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும்.
இது, முத்தகச் செய்யுளது இயல்பு கூறுகின்றது.
இ-ள்: மேல் கூறிய நால்வகைச் செய்யுளுள் முத்தகச் செய்யுள் என்பது தனியே நின்று பொருள் பயந்து முற்றுப்பெறும் என்றவாறு.