என வரும்.
கார்மேகம் போன்ற கொடை வழங்கும் நீண்ட கைகளை உடைய வாட்போரில்
வல்ல அபயனுடைய பகைவர்கள் அவனுக்கு அஞ்சிக் காட்டிற்கு ஓடிப் புகலிடம்
தேடிக் கொள்வ ராதலின், அவர்களுடைய விரும்பத்தக்க மெல்லிய ஆடை,
காட்டில் தளிர்த்தலை யுடைய தழைகளே; உணவும் கனிகளே; அவர்களுக்குச் சுற்றமும்
மான்களே; அவர்கள் உறைவிடமும் குகைகளே.
விழையார் - விழை ஆர் மெல்ஆடை,
உழையாம் - முழைஆம் உறை
இஃது இரண்டாம் அடியும் நான்காம் அடியும் முதலில் மடக்கியவாறு காண்க.]