என வரும்.
கொடியாராகிய திரிபுரத்தவரின் கொடிகள் ஆர்ந்த மூன்று மதில்களையும் அழித்த
இயல்பினர், பருத்த பெரிய கைகளையும் தொங்கும் வாயினையும் உடைய யானையின்
அஞ்சத்தக்க தோலைப் போர்த்தவர்; என்னை ஆட்கொள்ளுதற்கு உரியவர்;
தம் பெருமை கூறுதற்கு அரியவர்; கழுத்துக் கறுத்துவர்.
கொடியார் - கொடி ஆர்மதில்
(நால்வாய்) உரியார் - (எனைஆள) உரியார்,
ஓதற்கு அரியார் - களம் கரியார்
1, 3, 4ஆம் அடிகளில் முதல்மடக்கு அமைந்தவாறு காண்க.]