என வரும்.
[கூட்டமாக வண்டுகள் ஒலித்தெழ, நீராடுவார் கூந்தலில் பொருந்திய இதழ்
கொண்ட இனிய மலரைச் சுமந்து, அகில் மணந்து, அம் மகளிருடைய தோள்களில்
பூசிய செஞ்சந்தனம் தம்மிடத்தும் பூசப்பட்ட திரண்ட முலையிடையே தோய்ந்து
ஓடும் குளிர்புனல் முத்துக்களை நீர்த்துறைதோறும் குவிக்கும்
தோடு - கூட்டம். பூவின் இதழ்.
தோள் துதைந்த; தோய்ந்து ஓடு தண்புனல் - எனப் பிரித்துப் பொருள் செய்க.
தோடு என்ற சொல் பாடலின் நான்கு அடிகளிலும் வந்தமையால் இது முற்று
ஆதிமடக்காகும் (இடையிட்டு வந்தது)]