அணியியல் - சொல்லணி - மடக்கு

359 

     முற்று இடைஇறுதி மடக்கு வருமாறு:

    "வாமான மான மழைபோல்மத மான மான
     நாமான மான நகமாழக மான மான
     தீமான மானவர் புகுதாத்திற மான மான
     காமான மான கவின்கான்கனன் மான மான"

     இஃது இடையிட்டும் இடையிடாதும் வந்தது. ஒழிந்தன வந்துழிக் காண்க.

     [வாவும் மான்களினுடைய பெருமையை உடையன; மேகம் போன்ற
 மதயானைகளை உடையன; அச்சமான விலங்குகளின் நகங்கள் கிழிக்கும் மார்பினை
 மான்கள் உடையவாயின; தீமையே வடிவமாயின; மக்கள் உள் நுழையாத் தன்மை
 பெற்றன; சோலைகளை ஒப்ப மிக்க அழகுடைய காடுகள் (வேனிலால்) நெருப்பு
 வடிவினமாயின.

     வாம் மான மான; மழைபோல் மதமானம் ஆன; நாம் ஆன மான நகம் ஆழ்
 அகம் மானம் ஆன; தீமை ஆன; மானவர் புகுதாத் திறமான ஆன; கா மான மான
 கவின்கான் கனல் மானம் ஆன - என்று பொருள் செய்க.

     "கவின் கான்" - எழுவாயாகக் கொள்க.]

     இஃது இடையிட்டும் இடையிடாதும் வந்த முற்று இடை இறுதி மடக்காமாறு
 காண்க.

     அடிதோறும் தனித்தனியே வந்த இறுதி முற்று மடக்கு வருமாறு:

    "வருமறை பலமுறை வசையறப் பணிந்தே
        மதியொடு சடைமுடி மருவும்அப் பணிந்தே
     அருநடம் நவில்வதும் அழகுபெற் றமன்றே
        அருளொடு கடவுவது அணிகொள்பெற் றமன்றே