"முதலடி இரண்டினும் மூன்றினும் முதலினும்
இடையடி இரண்டினும் முதலினும் இறுதியும்
இறுதி இரண்டினும் முதலொழித் தேனைய
அடியினும் கடைஅயல் அல்லன மூன்றினும்
மூன்றாம் அடிஒழித்து ஏனைய மூன்றினும்
இரண்டாம் அடிஒழித்து ஏனைய மூன்றினும்
எல்லா அடியினும் எய்து என்ப." - மு. வீ. சொ. 11]
அவற்றுள், ஈரடி மடக்கு வருமாறு:
"விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாக
விரைமேவு மதமாய விடர்கூடு கருநாக
வரைமேவு நெறியூடு தனிவாரல் மலைவாண
நிரைமேவும் வளைசோர இவள்ஆவி நிலைசோரும்."
இது முதல்ரஈரடி மடக்கியது.