இஃது இரண்டாம் அடியும் ஈற்றடியும் மடக்கியது.
[மேம்பட்ட நலம் பெறத் திருவடிகள் இரண்டனையும் பரவிப் புகழும் அடியார்
குலத்தவர் கைகளைத் தன் குற்றேவலுக்கு ஏற்பித்துக்கொள்ளும் காஞ்சிமாநகரத்து
ஏகாம்பரநாதன், நன்மைமிக்க பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு, குலத்தான் மேம்பட்ட
பாம்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒற்றை ஆடையை உடையவன்.
பணி - தொண்டு, பாம்பு.
ஏகாம்பரம் - ஒற்றை மாமரம், ஒற்றை ஆடை.
இதன்கண் இரண்டாம் அடி நான்காம் அடியாக மடக்கியவாறு காண்க.]