366

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     கமதன் ஆகம், மத நாகம் - என்று பிரித்துப் பொருள் கொள்க.

     இதன்கண், இரண்டாம் அடி மூன்றாம் அடியாக மடக்கியவாறு. இவை ஆறும்
 ஈரடிமடக்கு.]

     மூவடி மடக்கு வருமாறு:

    "காம ரம்பயில் நீர மதுகரம்

     காம ரம்பயில் நீர மதுகரம்

     காம ரம்பயில் நீர மதுகரம்

     நாம ரந்தை உறநினை யார்நமர்."

     இஃது ஈற்றடிஒழித்து ஏனை மூன்று அடியும் மடக்கியது.

     [சோலைகளில் உள்ள மரங்களில் பழகும் வண்டுகள், காமரம் என்ற பண்ணினைப்
 பாடும் நீர்மையன; தேனைக்கொண்ட மன்மதன் அம்புகள், வேல் போன்று கூரியவாய்
 உள்ளன. வேனிற்காலம் வரவும், நாம் துன்புறுதலை நம் தலைவர் நினைக்க
 வில்லையே - என்று வேனிற்பருவ வரவின்கண் பிரிதல் ஆற்றாது தலைவி
 புலம்பியவாறு.

     கா மரம் பயில் மதுகரம், காமரம் பயில நீர;

     மது கரம் காமர் அம்பு அயில் நீர; மது கரம்

     நாம் அரந்தை உற நமர் நினையார் - எனப் பொருள் செய்க.

     கரம் - கொண்டிருத்தல், எதிர்ப்படல்.

     மது - தேன், ஆகுபெயரால் இளவேனிற்காலம்.

     இதன்கண், முதலடி இரண்டாம் மூன்றாம் அடிகளாக மடக்கியவாறு.