இஃது இரண்டாம் அடி ஒழித்து ஏனை மூன்று அடியும் மடக்கியது.
[விளக்க முற்றனவாகிய விருப்பம் மருவும் வளைகள் பாதங்களை நோக்கிக்
கழன்று விழவும், நம்மை அகன்ற தலைவர் நம் நலிவு கண்டு நம்பக்கல் மீண்டாரல்லர்.
சோலைகளில் மருவும் வண்டினங்கள் அச்சந் தருவனவாய் உள்ளன. விரும்பத்தக்க
சிறந்ததது (பழைய) நாள்கள் நமக்கு நீக்கப்பட்டன ஆகிவிட்டன - என்று தலைவன்
பிரிவிடைத் தலைவி புலம்பியவாறு.
வண்டுஇனம் அடியவாய், அகன்றார் உழை வாரலர்;
காமரு வண் தினம் கடிய ஆயின - எனப் பொருள்செய்க.
இதன்கண், முதலடி மூன்றாமடியாகவும் நான் காமடியாகவும் மடக்கியவாறு]