இக்குளகம் இரண்டு பாடல்களாக அமையும் உகளகம், மூன்று பாடல்களாக
அமையும் சாந்தானிகம், நான்கு பாடல்களாக அமையும் காபாலிகம், ஐந்தும் ஐந்துக்கு
மேற்பட்டனவும் ஆகிய பாடல்களாக அமையும் அந்தியம் என நான்கு வகையினது
என்று மாறன் அலங்காரம் கூறுகிறது.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 4.
"குளகம் பலபாட்டு ஒருவினை"
- வீ 178
"குளகம் பலபாட் டொருவினை பேர்கொண்டு
வளர்முலையாய் மூன்றிடத்தும் மன்னும் - அளவை
உகளகஞ்சாந் தானிகங்கா பாலிகத்தோ டைந்தின்
மிகல்வகைத்தா நூல்சொல் விதி"
- மா. 68
"குளகம் பலபாட் டொருவினை கொள்ளும்"