என வரும்.
[உமாதரனும் (உமையைத் தரித்தவன்) மாதரனும் (மானைத் தரித்தவனும்),
மா (அழகு) தரனும், மா (மாமரம்) தரனும், மா (யானைத்தோல்) தரனும், மாதரனும்
(இடபத்தை ஊர்பவனும்), ஆதரனும் (அடியாரிடம் அன்புடையவனும், மாது அரன்
(பெருமை பொருந்திய சிவபெருமானாவான்). இதுவும் ஏகபாதம்.]
உமாதரன் - உமையைத் தரித்தவன்;
மாதரன் - மானை ஏந்தியவன்;
மாதரன் - அழகை உடையவன்;
மாதரன் - மாமரத்தடியில் தங்கியிருப்பவன்;
மாதரன் - யானைத்தோலைப் போர்த்தியவன்;
ஆதரன் - விருப்பமுடையவன்;
மாதுஅரன் - பெருமை மிக்க சிவபெருமான்.