372

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [வெளியே நின்று சொல்லுவதற்கு முடிவில்லாத அரிய நேரத்தில், வெள்ளம்
 நிலைபெற்று உலவிவருகின்ற கடலின் பெரிய அலைகள் மலைக்கு ஒப்பாக வந்து
 இப்பெண்ணின் உறுப்புக்களைத் துன்புறுதலில் ஒன்றற்கு ஒன்று இணையாம்படி
 துன்புறுத்தும்.

     ஓத நின்று உலவா அரும் வேலைவாய், ஓதம் நின்று உலவா வரும் வேலைவாய்
 மா தரங்கம் மலைக்கு நிகரவே, மாதர் அங்கம் நிகரவே மலைக்கும் - என்று பிரித்துப்
 பொருள் கொள்க.

     இதுவும் முதலடியும் மூன்றாமடியும், இரண்டாமடியும் நான்காமடியும் மடக்கியவாறு]

     அந்தாதி மடக்க வருமாறு:

    "மாலை யாகவெய் தனங்கவேள் பயில்தரு மாலை
     மாலை வேட்டவர் மனங்கொலோ அவன்துழாய் மாலை
     மாலை யோவுடைத் ததுநினைந் தெழுதரு மாலை
     மாலை யாவுடை யவரைவந் திடர்செயு மாலை"

 எனவும்

     [வரிசையாக அம்பு எய்து மன்மதன் பழகுகின்ற இயல்பை உடையது
 மாலைப்போது. திருமாலை விரும்பியவர் மனம் அவன் திருத்துழாய் மாலையிலுள்ளது.
 மாலையோ அருமையுடையது. அம்மாலையை நினைத்து எழுகின்ற மயக்கத்தை
 இயல்பாக உடையவருக்கு இம்மாலைக்காலம் வந்து துயரம் செய்யும்.

     மாலையாக அம்பு எய்து அளங்கவேள் பயில்தருமாலை; மாலை வேட்டவர் மனம்
 அவன் துழாய்மாலை; மாலையோ உடைத்து; மாலை மாலையாக உடையவர்களை
 மாலை வந்து இடர் செய்யும் - என்று பிரித்துப் பொருள்கொள்க].

     இஃது அடிதோறும் முதலும் இறுதியும் முழுதும் மடக்கியவாறு அந்தாதித்தொடை
 அமையுமாறும் காண்க.]