என வரும்.
[பலவிதமதான ஓசைகள் கூடிய இசையினை ஆராயும் தொழி நீங்காமல்
தாதுகளையே ஆதாரமாக நறிய தண்ணிய மலர்கள்மீது தாவி நீண்ட தண்ணிய
சோலையில் வாழும் கோடுகளை உடைய வண்டே! அன்னை என்னை இற்செறிக்கப்
போவதனைத் தலைவனுக்குக் கூறுவாயாக - என்ற தலைவி கூற்றில்,
நாநா (நானாவிதமான) நாதம் கூடும் இசை நாடும் தொழில் ஓவாய், தாது
ஆதாரமாக மலர்மீது வாவா (வாவி) வாழும் வரிவண்டே! யாய் ஆயாள் (தாயானவள்)
இல் சேர்த்துவது அன்பற்கு இசையாய் - என்று பொருள்கொள்க.
இப்பாடலில், முதலடியில் நா, இரண்டாம் அடியில் தா, மூன்றாம் அடியில் வா,
நான்காமடியில் யா என்ற எழுத்துக்கள் மடக்கியவாறு காண்க.]
"ஓரெழுத்து மடக்கலும், என்ற உம்மையால் ஓரெழுத்தும் ஈரெழுத்தும்
மூவெழுத்தும் நான்கெழுத்தும் உயிராயும் மெய்வருக்கமாயும் இனவருக்கமாயும் வரும்.
அவ்வாறு வருங்கால் உயிராயும் உயிர்மெய்யாயும் வரும்.