எனவும்,
[அபயனே! எங்கள் மார்பினைத் தழுவாதே, இரவில் நீங்குக. காமனே! தாமரை
மலரையே இடமாக உடைய திருமகளை ஒத்த இத்தலைவியுடைய களங்கமற்ற செறிந்த
கூந்தலை உடைய முகத்து அழகைக் கெடுக்காதே - என்று பரத்தையிற் பிரிந்து வந்த
தலைவனுக்கு தோழி வாயில் மறுத்தது.
அபய! மதன! அல் அகலம் அமலல்; அகல்; கமல பவனம் அவள அமல அடர
அளக வதனம் அடரல் - என்று பொருள்கொள்க.
இஃது எல்லாவிடத்தும் அகரமாகிய குற்றுயிரே வந்த குற்றுயிர் மடக்காமாறு
காண்க.]