எனவும் வரும். ஏனைய வந்துழிக் காண்க.
[நின்னை யான் நீசெய்யும் செயல் என்ன என்று வினவுவேன் அல்லேன்;
நின்செயல்களை யான் யாது காரணம் பற்றியும் நினையேன்; உன்னை நான்
உன்னைச்சேர்ந்த எனக்கு இன்னாதன செய்பவனாக நின்தன்னலம் கருதுகின்றாய்
என்று கூறமாட்டேன்; நின்னையே விரும்பும் நான் பலவித அச்சங்களையும்
துன்பங்களையும் உறுவேன். என்னை நீத்துவிடும் நீ நானாக இருந்து நினைத்துப் பார்.
நீ அதனை விடுத்து மகிழ்ச்சியோடு பாடிக்கொண்டிருக்கிறாய்!
நின்னை நான் என்னென்னேன்; நின்னை நான் என் உன்னேன்; நின்னை நான்
நின்னானின் இன்னானா நின் என்னேன்; நாநா நாம் ஊனம் நின் உன் நான்.
நீ [த்துள்ள] நீ நான் என நினை; நீ நன்னானே - என்று பிரித்துப் பொருள் செய்க.
இது மெல்லன வருக்கம். இதன்கண் நகரமும் னகரமும் ஆகிய ஈரெழுத்து
வருக்கங்களே வந்துள்ளன.]