அணியியல் - மாறுபடு பொருள்மொழி

409 

     [மேகம் முழங்க இந்திரகோபப் பூச்சிகள் பரவின ; கடல் நீர் முழுதையும்
 அகத்தியனே உண்டு உமிழ்ந்தான் ; வஞ்சியையும் ஆளும் சோழன் வாராது
 ஒழிவானாக ; இவள் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய சிவந்த சிறிய அடியினை
 உடையாள் -- என்ற இப்பாடலில், உள்ள நான்கு முற்றுச் சொற்றொடர்களும்
 ஒன்றோடொன்று பொருடபொருத்தமின்றி இணைந்திருக்கும் வழுவை நோக்குக.

     கள்ளுண்ட களிப்பில் "மன்மதனுடைய வடிவத்தில் நான் கலந்துவிட்டேன். கங்கை
 மகனாகிய வீடுமன் வீமனுக்கு எதிரேதோற்று ஓடுவான் ; தாமரையின் மேல் அருகர்
 பெருமை வெளிப்படத் தோன்றியுள்ளார் ; இவ்வூரிலுள்ள பனை மரங்கள்
 குடிப்பதற்குக் கள்ளோடு பாலையும் பொழியும்" -- என்று ஒன்றோடொன்று
 பொருத்தமில்லாத முற்றுச் சொற்றொடர்களை மொழியினும், கட்குடியர் கூற்றைக்
 கொண்டு கூறுமிடத்துச் செய்யுளில் அமையும் என்பது.]                      74

மாறுபடு பொருள்மொழியும் அமைதியும்

 694. மாறுபடு பொருள்மொழி, முன்மொழிந் ததற்கு
     மாறுபடத் தோன்றி வருமொழித் தாம்;அது
     காமமும் அச்சமும் கைம்மிகின் உரித்தே.
     இதுவும் அது.

     இ-ள் : மாறுபடு பொருள்மொழி என்பது, முன்மொழிந்த செசற்பொருளோடு
 மாறுபட்ட பொருள் தோன்றிய மொழியினை உடைத்தாய் வரும். அதுவே, காமம்
 கைம்மிகுந்தார் கூற்றின்கண்ணும் அச்சம் கைம்மிகுந்தார் கூற்றின்கண்ணும்
 வழுவாகாது அமைவுடத்து என்றவாறு.