எனவும்,[பெருமை பொருந்திய யானைகளை உடைய தலைவனே! மின்னல் மின்னி
நீ விடுத்த தூதாகத் தலைவ முன்னேவந்து காட்சி வழங்கினாலும், அதனால் நின்
விரைந்துவரல் குறித்து ஆற்றாது, என் மனம் மானமில்லாத மனம் என்றும், என் நாணும்
குறைகிறது என்றும், தன் ஒப்பில்லா அழகிய மேனியை உடைய தலைவி
ஆற்றாமையால் கூறிக்கொண்டிருந்தாள் - என்று வினைமுற்றி மீண்டுவந்த
தலைவனிடம் தோழி கூறியது.
மனம் என்மனம், நனி நாணும் ஈனம்ஆம், ஆனா மின்னல் மின்ன, மான
(ஒப்பில்லாத) மணி மேனி - என்று பிரித்துப் பொருள் கொள்க.
இது மெல்லினமே அமையப் பாடப்பட்டவாறு காண்க.]