அணியியல் - மிறைக்கவி

391 

 

     அஞ்சத்தக்க போரிடும் அம்பிற்குப் பெயர் என்ன? -- அம்பு.

     அழகுக்கு உரிய பெயர் யாது? -- அம்.

     சிவபெருமான் வீற்றிருக்கும் இருப்பிடம் யாது? -- ‘திருவேகம்பம்’.

     திரு, ஏகு, அம்பு, அம் - திருவேகம்பம் ஆயினவாறு.

     ‘துதித்திடும் ஒருபொருள் தொடர்ச்சொலைப் பிரித்து
     மதிப்பிட வினாய வகைக்கெதிர் மொழியாய்
     விதிப்பட உரைப்பது வினாஉத் தரமே.’ - மா. 280

     ‘வினாவொடு விடையும் விரிந்து வருவது
     வினாவுத் தரமென விளம்பப் படுமே.’ - மு. வீ. சொ. 15 ]

9. நாகபந்தம்

     நாகபந்தம் என்பது இரண்டு பாம்பாக மாறி எழுதிய ஒரு நேரிசை
வெண்பாவும்,இன்னிசை வெண்பாவும் எழுதிச் சந்நிதிகளில் நின்ற எழுத்தை
மற்றை இடங்களிலும் உறுப்பாய் நிற்கப் பாடுவது :

     [ ‘வரியரவு இரண்டாய் வால்வயிறு இரண்டாய்த்
     தெரிமூலை நான்காய்ச் சிறந்துமும் மூன்றுடன்
     நிலைபெறும் ஒருபான் இருபான் நிறீஇத்
     தலைஇரண் டெழுத்தாய்ச் சார்தரச் சந்தியின்
     கவினுறுத் தெழுத்துக் கலந்துறுப் பாக
     நவிலிரு பாவே நாக பெந்தம்.’ - மா.285 ]

வரலாறு :

     ‘அருளின் றிருவுருவே யம்பலத்தா யும்பர்
     தெருளின் மருவாதசீர்ச் சீரே ! -- பொருவிலா
     வொன்றே ! யுமையா ளுடனே யுறுதிதரு
     குன்றே தெருள வருள்’

எனவும்,