394

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [பூக்களை அருச்சித்து உலகத்தவர் போற்றுபவனாகிய, மன்மதனை அழித்த
 சிவபெருமானுடைய திருநாமம் காமாரி என்ற மூன்றெழுத்தாகும். முதலெழுத்தும்
 ஈற்றெழுத்தும் கடைச் சங்ககால வள்ளல்களும் ஒருவன் பெயராகிய காரி ஆகும்.
 நடு எழுத்தும் கடை எழுத்தும் உலகம காக்கும் மழையின் பெயராகிய மாரி ஆகும்.]

12. திரிபங்கி

     திரிபங்கி என்பது ஒரு செய்யுளுறுப்பு அமைந்து ஒரு பொருள் பயந்ததனையே
 மூன்றாகப் பிரித்து எழுத வெவ்வேறே தொடையும் பயனிலையும் பொருளும்
 பயப்பப் பாடுவது.

    "நனிஒரு பாவாய் நடந்தது தானே
     தனிதனி மூன்றாம் சால்புறு பொருண்மையின்
     பகுப்பநிற் பதுதிரி பங்கிய தாகும்."                          - மா. 296

    "ஒருகவிக் குட்கவி மூன்றெழு குவது
     திரிபங்கி என்மனார் தெளிந்திசி னோரே."              - மு. வீ. சொ.22

 வரலாறு :

    "ஆதரந்தீர் அன்னை போலினியாய் ! அம்பிகா பதியே !
     மாதர்பங் கா ! வன்னி சேர்சடை யாய் ! வம்பு நீள்முடியாய் !
     ஏதமுய்ந் தோர்இன்னல் சூழ்வினை தீர்எம்பிரான் ! இனியாய் !
     ஓதும்ஒன் றே, உன்னு வார்அமு தே ! உம்பர் நாயகனே."

 இதனையே,

     ஆத ரம்தீர்
     மாதர் பங்கா !
     ஏதம் உய்ந்தோர்
     ஓதும் ஒன்றே !

 எனவும்,