[ஆதரம் -- உலகப்பற்று. அம்பிகா -- பார்வதி ; வன்னி -- சமீபத்ரம். வம்பு -- புதிய அழகு ; ஏதம் -- உலகபந்தமாகிய துன்பம்.]
13. பிறிதுபடு பாட்டு
பிறிதுபடு பாட்டு என்பது ஒரு செய்யுளைத் தொடையும் அடியும் வேறுபட உரைப்பச் சொல்லும்பொருளும் வேறுபடாது வேறு ஒரு செய்யுளாகப் பாடுவது
["பிறிது ஒன்று ஆதல் பிறிதுபடுபாட்டே" - மா. 291
"பாவடி தொடைகளும் படுப்ப வேறு மேவருஞ் சொற்பொருள் வேறு படாமல் மற்றொரு பாவாய் வருவது பிறிது படுபாட் டெனப்பெயர் பகரப் படுமே." - மு. வீ. சொ. 25]