அணியியல் - மிறைக்கவி

397 

     வரலாறு :

    "தாயேயா நோவவா வீரு வெமதுநீ
     பின்னை வெருவத வருவதொ ரத்தப
     வெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்
     தாவா வருங்கலனீ யே"

 என வரும். இதனுள்,

    "கருவார் கச்சித
     திருவே கம்பத்
     தொருவா வென்னீ
     மருவா நோயே !"

 எனப் பிறிது ஒரு செய்யுள் போந்தவாறு கண்டுகொள்க.

     [எங்கட்குத்தாவா அருங்கலம் ! நீயே தாயே ; யாம் நோவு அவா ஈரு(க) ;
 எமது (சார்வாயுள்ள) நீ பின்னை வெருவா வருவது ஓர் (ஆராய்வாயாக) ; அ(து) தப
 எம்புகல் வேறு இருத்தி வைத்திசின் ; இச்சை கவர்.

     எங்களுக்குக் கெடாத அரிய செல்வமாகிய தெய்வமே ! நீயே எங்களுக்குத்
 தாய் ஆவாய். யாம் வருந்துவதற்குத் காரணமாகிய உலகப்பற்றுக்களை நீக்குவாயாக ;
 எமக்குப் பற்றுக் கோடாம் நீ எங்க எங்கள் மற்றைய காமங்களை மாற்றி உலகத்
 தொடர்பிலிருந்து எங்களை விலக்கி வேறாக வைப்பாயாக.]

15. கரந்துறை செய்யுள

     கரந்துறை செய்யுள் என்பது ஒரு செய்யுட்குப் பிறிது ஒரு செய்யுட்சொல் புகுதாது
 எழுத்துப் பொறுக்கிக் கொள்ளலாம்படி பாடுவது.