["முதலொரு செய்யுள் முடித்ததன் ஈற்றின்
பதமன் இறுதியின் பயிலெழுத் துத்தொடுத்து
இடையிடை யிட்டெதிர் ஏறாய் முதலயல்
அடைதரப் பிறிதொரு செய்யுள் கரந்தங்கு
உறைவது கரந்துறை செய்யுளென் றுரைபெறும்." - மா. 288
"ஓப்புர வினிலிருந்து ஒர்பாக் குரியன
அக்கரம் பொருக்கிக் கொளலா கும்படி
பாடல் கரந்துறைப் பாட்டென மொழிப." - மு. வீ. சொ. 13]
வரலாறு :
"அகலல்குல் தேரே, அதரம் அமுதம்,
பகர்தற்கு அரிதுஇடையும், பாரக்கின், -- முகமதியம்,
முத்தென்ன லாம்முறுவல், மாதர் முழுநீல
மைத்தடங்கண், வெவ்வேறு வாள்"
எனவரும். (உரை வெளிப்படை) இதனூள் போந்த செய்யுள் :
"அகர முதல எழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே உலகு." - குறள் 1
எனக் காண்க.
சக்கரம் நான்கு ஆரல் சக்கரமும் ஆறு ஆரல் சக்கரமும் எட்டு ஆரல் சக்கரமும் என மூவகைப்படும். அவற்றுள் நான்கு ஆரல் சக்கரம் இரண்டு வகைப்படும்.
["சக்கரத் துள்தடு மாறுதல் தானே
சக்கர பெந்தம் எனச்சாற் றினரே." - மா. 281
"அதுவே,
நாலிரு மூன்றிரு நாலென நாட்டும்
சால்பினி லார்புனை தன்மைய ஆகும்." - மா. 282 |
|
|