இ-ள் : பொருளினால் தொடர்தலும் சொல்லினால் தொடர்தலும் என
இருவகைப்படும் தொடர்நிலைச் செய்யுள் என்றவாறு.
எனவே, பொருள் தொடர்நிலைச் செய்யுளும் சொல் தொடர்நிலைச் செய்யுளும்
எனத் தொடர்நிலைச் செய்யுள் இரண்டு வகைப்படும் என்பது ஆயிற்று. இரண்டு
என்னாது "வகை" என்ற மிகையானே, மூன்றாவது பொருளினானும் சொல்லினானும்
தொடர்தலும் உண்டு எனக் கொள்க.
7