சோலையினுள் நலம் சிறக்க, மயில்கள் களிக்க, கார்மேகம் திசைகளை மூடி உலகை இருளச்செய்ய, வண்டுகள் செறியும் மயிர் முடியை ஒப்பனை செய்துகொண்டு சிறந்த தலைவி தங்கியுள்ளாள் - என்று தலைவன் பாங்கற்கு இயல் இடம் கூறியவாறு.
சுழிகுளம் என்பது ஒரு செய்யுளை எவ்வெட்டெழுத்தாக நாலடியும் நான்குவரி எழுதி, மேல் நின்று கீழ் இழிந்தும் கீழ் நின்று மேல் ஏறியும் முடிய உச்சரித்தாலும், அவ்வரி நான்குமேயாய் அச்செய்யுள் தானே முற்றுப் பெறுவது.
["செழித்தெழு நீர்குளத் தினுட்செறிந் தகைத்கொடு
சுழித்தடங் குவபோன்று அடக்குதல் சுழிகுளம்" - மா. 295]
"கவிமுதி யார்பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா"
என வரும்.
[கவிகளில் முதிர்ந்தார் பாடும் பாடலே விலையிடுதற்கு அரிய சிறந்த கவியாம். இடைவிடாது முயல்பவர் செல்வங்கள் அழிந்தும் அவை நீங்கா.]
சருப்பதோபத்திரம் என்பது ஒரு நிரை எவ்வெட்டாக அறுபத்து நான்கு அறை கீறி ஓரடி எவ்வெட்டெழுத்தாக நான்கடியான் ஒரு செய்யுள் பாடி அதனை 51-52
|
|
|