ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 101, 102
["உரியசொல் பலபொருள் ஒன்றின்ஒன் றாதன
பிரிபொருள் சொற்றொடர் எனும்பெயர் உடைத்தே." - மா. 205
"அதுவே,
"கள்ளுண் மாந்தர்பித் தரிற்கடி வரையில." - 206
"பித்த மயக்கினும் பெருங்குடி வெறியினும்
வழுவின் றென்மனார் மறைஉயர்ந் தோரே." 31]
வரலாறு :
"கொண்டல் மிசைமுழங்கக் கோபம் பரந்தனவால்,
தெண்திரைநீர் எல்லாம் திருமுனியே-உண்டுஉழிழ்ந்தான்;
வஞ்சியார் கோமான் வரவு ஒழிக ; மற்றுஇவள்ஓர்
பஞ்சிஆர் செஞ்சீ றடி ;
எனவும்,
"காமன் உருவம் கரந்தேன்யான் ; காங்கேயன்
வீமன் எதிரே வலங்குமே ; -- தாமரைமேல்
பால்பொழியும் இவ்வூர்ப் பனை" .
எனவும் முறையே அவ்வாறாதல் கண்டுகொள்க. பித்தினான் மயங்கிக் கூறுதல் வந்துழிக் காண்க.
"வரைவின்று" என்னாது "கடிவரையின்று" என்றதனால், பிள்ளைத்தன்மையான் மொழியினும் அமையும். அதுவும் வந்துழிக் காண்க. "அவற்றுள்" என்பதனை இப்பொருண்மை அதிகாரம்முற்றும் அளவும் உய்த்து உரைக்க. (74) |
|
|