விடமாட்டேன். ஐயோ ! மாறுபாடு செய்யும் எமனை ஒத்த வீமனுடைய எதிரே
நின்று போர் புரிய வல்லேனோ நான்?" என்று இவ்வாறு முதலில் ஐவரையும்
வெல்லும் ஆற்றலுடையவனாகக் கூறி, பின் அவ்வைவருள் ஒருவனான வீமனுக்கே
அஞ்சும் திறம் உரைப்பது முன்னுக்குப் பின் முரணாயினும், காமம் மிக்கவன்
கூற்றாகக் கோடலின் அமையும் என்பது.] 75