"தீத்தீத்தீ" என்னும் அடுக்கும் தெலுங்குத்தொடரே என்பது இப்போது
தெரியவருகின்றது. "தீ" என்பது அம்மொழியுள் வழிவிடு ஒதுங்கு என்ற பொருளின்
வழங்குவதாம். சோழ வீரரைக் கண்டதும், வடநாடர் "ஒதுங்கு ஒதுங்கு" என்று
கூறிக்கொண்டு போக்கிடம்பெறாது சோர்வர் என்பது இப்பாடற் கருத்தாமென்க.
"நெருப்பு நெருப்பு" என்ற அடுக்குதற்குரிய முன்னிகழ்ச்சியொன்றும் பாட்டில்
குறிப்பிடப்பெறாமையால், இப்பொருள் கூறுதலே தக்கதாதல் கண்டுகொள்க. பக். 425]