414

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "வானவர்கள் தாழ்ந்து பணிகேட்க, மாறாகத்
     தானவர்கள் சுற்றம் தடிந்துஒழித்த, -- மேன்மை
     அரியே, அனைத்துலகும் காக்கும் கடவுள் ;
     எரியே., மறையோர்க்கு இறை"

 எனவும் முறையே காண்க.                                             (77)

     [தன் மேற்புறம் மேக மண்டலத்தால் மூடப்பட்டு, உள்ளே மகரந்தங்கள்
 பரவச்செய்து, தேவர்களுக்கும் தன் வனப்பு மிகுதியால் மயக்கத்தையும் கொடுத்து
 அசோக மரத்தினுடைய நெருப்பை ஒத்த பூங்கொத்துக்களை உடைத்தாய் வண்டுகள்
 சூழ்ந்து திரியும் சோலைக்குள் யாரும் புகமாட்டார்கள் -- என்ற இப்பாடலில், அரி
 என்ற சொல் சிங்கம், நெருப்பு, வண்டு முதலிய பல பொருளுக்கும் ஏற்றதாய்ப்
 பொருள்மயக்கம் தருதலின் இங்ஙனம் கூறுதல் வழு என்பது.

     தேவர்கள் அடிவணங்கி இட்டபணிகளை முட்டின்றிச் செய்ய, அவர்களுக்கு
 பகைவர்களான அசுரர் கூட்டங்களை அழித்த மேம்பாட்டை உடைய திருமாலே
 எல்லா உலகங்களையும் காக்கும் கடவுளாவான் ; அக்கினியே அந்தணருக்குத்
 தெய்வமாவான் -- என்ற இப்பாடலில், அரி என்ற சொல் மயக்கமின்றித்
 திருமாலையே உணர்த்துவதால், இஃது அமைதியாமாறு காண்க.]                77

நிரல்நிறை வழுவும் அமைதியும்

 697. ஒருநிரல் முன்வைத்து, அதன்பின் வைக்கும்
     நிரல்நிறை பிறழ்வது நிரல்நிறை வழு ; அஃது
     உய்த்துஉணர வருவழி உடன்பாடு உடைத்தே.

 இதுவும் அது

     இ-ள் : ஒரு நிரல் முன் எண்ணி வைத்து, அதன் பின் வரும் நிரல் மாறுபட
 வைப்பது நிரல்நிறை வழுவாம். அதுவே, அந்நிரல்நிறை உய்த்து உணரத்
 தோன்றுவதாயின் அமைவு உடைத்து என்றவாறு.