420

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

செய்யுள் வழுவும் அமைதியும்

 700. செய்யுள் வழுவே யாப்பிலக் கணத்தோடு
     எய்தல் இல்லா இயல்பினது ; அதுவே
     ஆரிடத் துள்ளும், அவைபோல் பவற்றுளும்
     நேரும் என்மனார், நெறிஉணர்ந் தோரே.

 இதுவும் அது.

     இ-ள் : செய்யுள் வழு என்று சொல்லப்படுவது, செய்யுள் இலக்கணத்தோடு
 பொருந்தாத இயல்பினை உடைத்தாம். அதுவே, ஆரிடத்துள்ளும் ஆரிடப்
 போலியுள்ளும் பொருந்தும் என்று கூறுவர், இலக்கணங்களை அறிந்தோர் என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 115, 116

    ["பழுதறப் பகர்ந்த பாட்டின தியல்பு
     வழுவுதல் செய்யுள் வழுஎன மொழிப."                       - மா. 317 

    "தவதுறு பவரவர் போலுநர் சாற்றலும்
     நலமுறப் புனைசெயுள் நடைநவை யிலவே."                   - மா. 13] 

     ஆரிடம் என்பன இருடிகளால் சொல்லப்படுவன, அவற்றின் போலியாவன
 சாவவும் கெடவும் வாழவும் பாடவும் மனத்தது பாடவும் வல்லாரால் பாடப்படுவன.

     வரலாறு :

    "ஆதாரம் துயர்தர, அயர்தரும் கொடிக்குப்,
     பூதலம் புகழ்புனை வளவன் -- தாதகி
     தாங்குஅரும்பால் அன்றித் தகையுமோ, தார்அநங்கன்
     பூங்கரும்பால் அந்தடர்ந்த போர்?"

 எனவும்,