[ஆசை வருத்தத்தைத் தர அதனால் வருந்தும் தலைவிக்கு உலகை
வனப்புறுத்தும் புகழை உடைய சோழன் அணிந்துள்ள மாலைகளால் அன்றி மன்மதன்
மலர் அம்புகளால் செய்யும் போர்த் துன்பம் நீங்காது - என்ற இப்பாடலில்,
முதலிரண்டடியும் ஆசிரியமாய்ப் பின் இரண்டடியும் வெண்பாவாய் வருதலின்
செய்யுள் வழுவாம். மாறி வந்திருப்பின் மருட்பாவாய் வழா நிலையாகி இருக்கும்.
("ஏரி இரண்டும்" என்ற வழா நிலைப் பாடல் ஈண்டு ஏடெழுதுவோரால்
பொருத்தமின்றி எடுத்துக் காட்டப்பட்டுள்ளது என்பதே எளியேன் கருத்தாகும்.]
மனம் வேறுபட்டு, தன்னுடைய தொடர்பில்லாத நான் தரையில் கிடந்து ஊடவும்
பல நாறும் நான் உகுத்த கண்ணீரைத் துடைத்த என் தலைவனுடைய கைகள்,
வாளைப் பற்றிக் கொண்டு அணிந்துள்ள கடகத்து மணி ஒளிவீச ஒள்ளிய சிவந்த
குருதியில் கிடக்கின்றதே - என்றவாறு. இது பத்தினிப்பாட்டு என்று யாப்பருங்கல
விருத்தி கூறும்.
இவ்வெண்பாப் பாடலில் ஈற்றடி நீங்கலான ஏனைய அடிகள் நான்கே சீர்களை
உடையவாதல் வேண்டும் என்ற வெண்பா இலக்கண வரையறைக்கு மாறாக,
இரண்டாம் அடியில் ஐந்து சீர்கள் வந்துள்ளன. இச்சான்றோர் பாடல்
வழுவமைதியாகக் கொள்ளப்படுகிறது.] 81