701. சந்தி வழுவே எழுத்திலக் கணத்துச்
சந்தியொடு மருவாத் தன்மையது ; அதுவே
இரண்டாம் வேற்றுமைக்கு எதிர்மறுத்து வருமே.
இதுவும் அது.
இ-ள் : சந்தி வழு என்று சொல்லப்படுவது, எழுத்திலக்கணத்தில் கூறிய
சந்தியோடு மாறுபட்ட இயல்பினை உடைத்தாம். அதுவே, இரண்டாம் வேற்றுமைப்
புணர்ச்சிக்கண் அவ்வாறு மாறுபட்டுவரும் என்றவாறு.
முழுதும் - தண்டி 117, 118
முழுதும் - தண்டி 4.
"ஆற்றல்சால் எழுத்தினுள் அமைத்தசந் தியின்வகை
மாற்றம் துறவழு வுதல்சந்தி வழுவே." - ம. 315
"ஐயென் உருபு தொனிக்அஃது இயல்பாத்." - 316
வரலாறு :
"உன்புஊடு உருவ இனைவேன் மனம்கலக்கும்
பொன்பூண் சுமந்த புணர்மலையாள் -- மின்பூண்
நுடங்குஇடைக்குக் காவலாய், நோக்கம் கவரும்,
படம்கிடக்கும் அல்குல் பரப்பு"
எனவும்,
"இரவி துணைத்தாள் இகல்வேந்தர் சென்னி
விரவு மலர்பொழியும் ; மேவா -- அரைசுஇரிய
மின்பொழியும் செவ்வேல் ; வெறியேன் மனம்கவரப்
பொன்பொழியும், செய்கைப் புயல்"
எனவும் முறையே காண்க. (82)