அணியியல் - காலமலைவு

427 

கலைமலைவு

 704. கலைஎனப் படுமவை காண்தக விரிப்பின்
     காமமும் பொருளும் ஏமுறுத் தழுவி,
     மறுஅறக் கிளந்த அறுபத்து நான்கு ; அவை
     மலைய உரைப்பன கலைமலைவு ஆகும்.

 இதுவும் அது.

     இ-ள் : கலை என்று சொல்லப்படுவனவற்றை விளங்க உரைக்கும் இடத்து,
 இன்பமும் பொருளும் பொருத்தமுறத் தழுவிக் குற்றம்அறச் சொல்லப்பட்ட
 அறுபத்துநான்குமாம்; அவை தம்முள் மலைய உரைப்பன கலைமலைவாம் என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

முதல் மூன்றடி - தண்டி 121, மாறன் 323.

     வரலாறு :

    "ஐந்தாம் நரம்பாம் பகைவிராது, ஆறாகி
     வந்த கிளைகொள்ள, நான்காம -- முந்தை
     இணைகொண்ட யாழ்எழூஉம், ஏந்திழை,தன் ஆவித்
     துணைவன் புகழே தொடுத்து."

     இதனுள், நின்ற நரம்பிற்கு ஐந்தாவது கிளை ஆதலால் அதனைப் பகை என்றும்
 ஆறாவது பகை ஆதலால் அதனைக் கிளை என்றும், நான்காவது நட்பு ஆதலால்
 அதனை எட்டாவதன் பெயராகிய இணை என்றும் சொன்னமையால் கலை
 கலைவு ஆயிற்று.                                                    (85)

     [தலைவி தன் உயிர்த்துணைவன் புகழைத் தொடுத்துத் தான்யாழ் எழுவினாள்
 என்று கூறும் இடத்துக் கிளை நரம்பைப் பகை என்றும், பகை நரம்பைக் கிளை
 என்றும், நட்பு நரம்பை இணை என்றும் கூறுதல் கலைமலைவு ஆமாறு காண்க.]  85