இ-ள் : உலகு என்று சொல்லப்படுவது, பல பொருள் உணர்த்துமேனும் ஈண்டு
ஒழுக்கத்தின் மேலிடத்தாம் ; அவ்வுலகத்தின் ஒழுக்கநெறியை மாறு பட உரைப்பது உலகமலைவாம் என்றவாறு.
என வரும். இதனூள், ஒருநில வேந்தனை எழு கடலும் தூர்த்தானாகவும் ஆகாயத்தே தன் யானையை ஓட்டிப் பகைவரை வென்றானாகவும் உலக ஒழுக்கோடு மாறுபடக் கூறினமையான், உலக மலைவு ஆயிற்று. (86)
[அலையும் கடல் ஏழையும் ஆழம் நீங்கச்செய்து, வான வெளியில், மலையை ஒத்த, மத மயக்கம் பொருந்திய யாகைளைச் செலுத்திப், பகைவரைச் சாம்பராக்கி என்றும் கெடாத சிறப்பினை உடைய இந்நிலவுலகத்து மன்னன் உலகையே தன் ஒற்றைக் குடைக்கீழ்க் கொணர்ந்தான் - என்ற இப்பாடல், உலகியல் நடைபேற்றுக்கு மாறாகக் கடலைத்தூர்த்தல், வானத்தில் யானையைச் செலுத்துதல் முதலிய செயல்களை நிலஉலக அரசன் மேல் ஏற்றிக் கூறுதலின் உலக மலைவாயிற்று.] 86