அணியியல் - நியாயமலைவு

429 

நியாயமலைவு

 706. நியாயம் என்பது நெறியுறக் கிளப்பின்
     அளவையின் தெளிக்கும் விளைபொருள் திறம்;அவை
     மாறுபட உரைப்பது அதன்மலைவு என்ப.

 இதுவும் அது.

     இ-ள் : நியாயம் என்று சொல்லப்படுவது இலக்கண வகையான் கூறுங்கால்
 காண்டல் முதலாகிய அளவைகளால் தெளிவித்து உரைக்கப்படும் பொருள்களது
 முடிவின் கூறுபாடாம்; அவற்றை அவ்வவர் கூறியவாறு கூறாது மாறுபடக் கூறுவது
 அதன் மலைவ என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

     அளவைகளால் தெளிவித்து உரைக்கப்படும் பொருள்களாவன அறுவகைப்பட்ட
 சமயங்களின் முடிவாகிய பொருள்களின் தோற்றமும் நிலையும் அழிவும் இன்னவகைய
 என்ற கூறதல்.

ஒத்த நூற்பாக்கள்

முதல் ஈரடி - தணி 123, மாறன் 324.

     வரலாறு :

    "ஆய பொருள்கள் கணந்தோறு அழியும்எனத்
     தூய அசோகின் முனிஉரைத்தது -- ஆய்வுஅற்றோ?
     காதலர் நீங்க, எழும்காம வெங்கனல்வாய்
     மாதர் உயிர்தாங்க மாறு."

     இதனுள் தோன்றும் பொருள்களெல்லாம் கணந்தோறும் அழியும் என்று
 போதியின் முனி உரைத்தான் எனற்பாலதனை அசோகின் முனி உரைத்தான்
 என்றமையான், நியாய மலைவு ஆயிற்று. ஒழிந்தனவும் வந்துழிக் காண்க.       (87)