430

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [பொருள் கணந்தோறும் அழியும் என்ற கூற்று, தலைவன் நீங்கவும் எழும்
 காமக்கனலில் அழியாது தலைவி உயிர் தாங்கி நிற்பதால், ஆராய்தற்குரியது,
 அதன்கண் நியாயவழு உரையில் விளக்கப்பட்டது.]                         (87

ஆகம மலைவு

 707. ஆகமம் என்பது மனுமத லாகி
     அறனொடு புணர்ந்த திறன்அறி நூல் ;அவை
     தம்முள் உரைக்கும் ஒழுக்க நெறியின்
     இழுக்க உரைப்பது ஆகம மலைவே.

 இதுவும் அது.

     இ-ள் : ஆகமம் என்று சொல்லப்படுவது மனு முதலாக அறத்தொடு கூடிய
 திறங்களை அறியும் பதினெண்வகை நூல்களாம் ; அந் நூல்களில் கூறப்படும்
 அறநெறிகளை அம் முறையால் கூறாது பிறழக் கூறுவது ஆகம மலைவாம் என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

முதல் ஈரடி - தண்டி 124, மாறன் 325.

     வரலாறு :

    "தெய்வம் விருந்துஒக்கல் தென்புலத்தார் தாம்என்று
     ஐவகையும் தம்பொருள்கொண்டு ஆற்றுவார் ; -- மைஇலா
     முக்கோலும், கல்தோய் முழுமடியும் தாங்கியே
     தக்கோர் எனப்படுவார் தாம்."

 இதனுள், இல்லறத்தார்க்கு உரிய அறத்தைத் துறவறத்தார்க்கு உரியனவாகச்
 சொல்லுதலான் ஆகமலைவு ஆயிற்று.                                   (88)