[பொருள் கணந்தோறும் அழியும் என்ற கூற்று, தலைவன் நீங்கவும் எழும் காமக்கனலில் அழியாது தலைவி உயிர் தாங்கி நிற்பதால், ஆராய்தற்குரியது, அதன்கண் நியாயவழு உரையில் விளக்கப்பட்டது.] (87
ஆகம மலைவு
707. ஆகமம் என்பது மனுமத லாகி அறனொடு புணர்ந்த திறன்அறி நூல் ;அவை தம்முள் உரைக்கும் ஒழுக்க நெறியின் இழுக்க உரைப்பது ஆகம மலைவே.
இதுவும் அது.
இ-ள் : ஆகமம் என்று சொல்லப்படுவது மனு முதலாக அறத்தொடு கூடிய திறங்களை அறியும் பதினெண்வகை நூல்களாம் ; அந் நூல்களில் கூறப்படும் அறநெறிகளை அம் முறையால் கூறாது பிறழக் கூறுவது ஆகம மலைவாம் என்றவாறு.