432

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     மலைக்கும், அகில்சுமந்து ஆரத்து வான்கோடு
     அலைத்து வரும்பொன்னி ஆறு."

 இதனுள், பிற நாட்டிற்கும் பிறமலைக்கும் உரிய மரகதமும் மாணிக்கமும் அகிலும்
 சந்தனமும் காவிரி அலைத்துவரும் என்றமையால், இடமலைவாய்ப் புகழ்ச்சியிடத்து
 அலங்காரம் ஆயிற்று.

     [பசிய மரகதச்சோதியுடன் சிவந்த மாணிக்கச்சோதி இருபாலும் சேர்தலால், சுமந்து
 சந்தனக் கிளைகளை அடித்துவரும் காவிரி யாறு பார்வதி பாகனான
 சிவபெருமானடைய உருவத்தை ஒத்திருக்கிறது.]

    "மண்டபத்து மாணிக்கச் சோதியான், வாவிவாய்ப்
     புண்டரிகம் மாலைப் பொழுதுஅலரும்; -- தண்தரளத்
     தாமம் சொரியும் தலைநிவலான், மெல்ஆம்பல்
     பூமலரும், காலைப் பொழுது."

 இதனுள், காலைமலரும் கமலம் மாலை மலர்வதாகவும், மாலை மலரும் குமுதம்
 காலை மலர்வதாகவும் கூறினமையான், காலைமலைவாய்ப் புகழ்ச்சியிடத்து அலங்காரம்
 ஆயிற்று.

     [மண்டபத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களின் சோதியால் குளங்களில்
 தாமரை மொட்டுக்கள் மாலையில் மலரும்; தண்ணிய முத்துமாலை சொரியும் சிறந்த
 நிலவால் ஆம்பற் பூக்கள் காலையில் மலரும் - என்ற இப்பாடலில், தாமலை
 மாலையிலும், ஆம்பல் காலையிலும் மலர்வதாகிய காலவழு அமைந்திருத்தல் காண்க.]

    "வஞ்சியர்கோன் வஞ்சி மதவேழ வார்மதத்தால்
     வெஞ்சுடர்சூழ் வேனில் வெயில்மறைப்ப, -- வஞ்சத்