[வீரசோழியம் 106-ஆம் காரிகை உரையுள் சந்தியின் உறுப்புக்கள் ஐந்தும் முகம்,
பயிர்முகம், கருப்பம், விமரிசம், நிருவாணம் என்ற பெயர்களோடு ஏறத்தாழ இவ்வாறே
விளக்கப்பட்டுள்ளன
இந்நூலார் குறிப்பிடும் விளைத்தலில் பயிர்முகம் கருப்பம் விமரிசம் என்ற
மூன்றும் அடங்கும் என்க.]
சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் சந்தியுறுப்பு ஐந்தனையும் இவ்வாறு
விளக்கியுள்ளார். இதனையே விபுலா நந்தரும் மதங்க சூளாமணியின் தொடக்கத்தில்
கூறியுள்ளார்.