பாட்டும் உரைநடையும் கலந்து அமைந்த தமிழ் நூல்கள் இக்காலத்து வழக்கில் இல்லை. தகடூர் யாத்திரை, பாரத வெண்பா என்பன உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக அமைந்தன என்ப.
வேற்றுமொழி வாக்கியங்கள் இடைமிடையத் தமிழில் காப்பியங்கள் இயற்றப்பட்டனவா என்பது ஆராய்தற்கு உரியது. நாடகங்களில் பிறபாடைமாக்கள் கூற்று அமையுங்கால், அவரவர் பாடையில் புகன்றனவாக அமைந்திருத்தல் கூடும்.