அணியியல் - குணவணி

51 

    "ஒருபா இறுதிமற்று ஒருபா முதல்வரத்
     தொடுப்பது சொற்றொடர் நிலையெனப் படுமே"    - மு. வீ. செய்யுளணி 7 

13 

 633. வைதருப் பம்மே கௌடம் என்றுஆங்கு
      எய்திய குணம்ஓர் இருவகைப் படுமே.

     பொருள் புலப்படுப்பது அணி எனத்தம் மேற்கோள் கூறி, அப்பொருட்குச்
 செய்யுள் இடம் ஆதலின் அதனைப் புலப்படுப்பதூஉம் அவ்வணிக்கு இயல்பு எனக்
 கோடலின் அச்செய்யுளை ஒருவாற்றான் தொகுத்துக் கூறி, அணி இலக்கணம்
 கூறுவான் தொடங்கியவற்றுள், இது நிறுத்தமுறையானே குண அணி இத்துணைத்து
 என்கின்றது.

     இ-ள் :   வைதருப்பமும் கௌடமும் என மேற்கூறிய குண அணி
 இருவகைப்படும் என்றவாறு.

     வைதருப்பம் கௌடம் என்பன ஆகுபெயர், அவை போலும் பாக்களை
 உணர்த்தலின்.                                                       (14) 

விளக்கம்

     வடமொழியில் வைதருப்ப நெறி, கௌட நெறி என்ற இரு முறைகள் உண்டு.
 விதர்ப்ப நாட்டவர் பின்பற்றிய வைதருப்ப நெறி - வருணனை, கற்பனை, நடை,
 செய்தி எல்லாவற்றையும் ஓர் அளவாகவே கொண்டிருப்பதாம். கௌட நாட்டவர்
 பின்பற்றிய கௌடநெறி - வருணனை, கற்பனை, நடை எல்லாவற்றிலும் உயர்வு
 நவிற்சியும் கடுமையும் பெருமிதமும் கொண்டு விளங்குவதாம். இவ்விரண்டற்கும்
 இடைப்பட்ட பாஞ்சால நெறி என்பதும் மாறன் அலங்காரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.