"செறிவே தெளிவே சமனிலை இன்பம்
ஓழுகிசை உதாரம் உய்த்தலின் பொருண்மை
காந்தம் வலியே சமாதி என்றாங்கு
ஆய்ந்த ஈரைங் குணனும் உயிரா
வாய்ந்த என்ப வைதருப் பம்மே" - தண்டி. 14
"செறிவுஎனப் படுவது நெகிழிசை இன்மை" - 16
"தெளிவுஎனப் படுவது பொருள்புலப் பாடே" - 17
"விரவத் தொடுப்பது சமநிலை யாகும்" - 18
"சொல்லினும் பொருளினும் சுவைபடல் இன்பம்" - 19
"ஒழுகிசை என்பது வெறுத்திசை யின்மை" - 20
"உதாரம் என்பது ஓதிய செய்யுளில்
குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றல்" - 21
"கருதிய பொருளைத் தெரிவுற விரித்தற்கு
உரியசொல் லுடையது உய்த்தலில் பொருண்மை" - 22
"உலகொழுக்கு இறவாது உயர்புகழ் காந்தம்" - 23
"வலிஎனப் படுவது தொகைமிக வருதல்" - 24
"உரியபொருள் அன்றி ஒப்புடைப் பொருள்மேல்
தரும்வினை புணர்ப்பது சமாதி யாகும்" - 25
"ஈண்டும் சிலீட்டம் உதாரதை காந்திபுலன் சமதை
தூண்டும் சமாதி பொருட்டெளிவு ஓகம் சுகுமாரதை
ஈண்டும்இன் பத்தொடு பத்தாவி என்னும் விதர்ப்பன [கௌடன்
வேண்டும் இவற்றை விபரீதமாக விளங்கிழையே" - வீ. 148
"செறிவார் சிலீட்டம் தொகைமிகை யாம்ஓகம் சீர்ச்சமதை
அறிவார் அடியொப்ப தாகும் சமாதி அவனிக்கொப்பப்