என வரும்.
[அரசே ! நீ வினைமுற்றி மீண்டு வந்தமையால் புகழ் சிறந்தது; தலைவி
உயிர்நிலைபெற்றது ; அவள் கூந்தல் பூக்களைச் சூடும் வாய்ப்பினைப் பெற்றது.
எங்கள் கண்கள்நின்னைக் காண்பதனால் ஆகும் களிப்பைப் பெற்றன - என்ற
இப்பாடலில் காணப்படும் கடியஓசையைச் சுவையாகக்கொண்டு விரும்புவாரும் உளர்
ஆதலின், ஒழுகிசைக்கு மறுதலைப்பட்டகடிய ஓசை கௌட நெறியார் மரபாகக்
கொள்ளப்பட்டுள்ளது. இவ்வின்னா ஓசையைக் கௌடநெறியாரும் வேண்டார் என்று
தண்டி அலங்காரம் கூறும். மாறன் அலங்காரக் கருத்தும்அதுவே.
பொய்ந்நிலப்பட்ட இன்னா இசையை மூன்று நெறியாரும் வேண்டார் என்று
குறிப்பிடும்மாறன் அலங்காரம், அவ்வின்னா இசைக்கு,