என வரும். பிறவும் அன்ன. (49)
[பார்வதிக்குக் கங்கை காரணமாகச் சிவபெருமானிடம் ஏற்பட்ட ஊடல் அவர்
உணர்த்தவும் தணியாதிருந்தது. அந்நேரத்தில் அருவி பாயும் கயிலை மலையை
இராவணன் பெயர்த்தெடுப்ப, அவ்வசைவினால் அஞ்சிய பார்வதி தான் முன் தணியாத
ஊடல் தணிந்து சிவபெருமானுடைய அழகிய மார்பினை ஆரத் தழுவினாள் --
என்ற இப்பாடலில், அரக்கனுடைய செயல் பார்வதியின் ஊடலைத் தணிக்கச்
சிவபெருமானுக்கு உதவிய செய்தி கூறப்பட்டவாறு.
சமாஹிதம் என்பது சமாயிதம் என்று திரித்து வழங்கப்பட்டவாறு.] 49