[வானம் என்ற ஒரு பொருள் மேனி என்ற ஒரு பொருளுக்கு உவமை.
பிறை என்ற ஒருபொருள் பற்கள் என்ற பல பொருளுக்கு உவமையாகின்றது.
சுறாமீன் கூட்டம் என்ற பலபொருட்டொகுதி படை ஏந்திய வீரர் குழாம் ஆகிய
பல பொருட்டொகுதிக்கு உவமை.
பெரும் புகழுடைய கரிகாலனை எதிர்த்து நிற்றல் ஆற்றாது வெண்ணிப்
பறந்தலையில் தம் பெருமையை இழந்து தோற்றோடிய பகை மன்னர்கள், தலைவன்
வந்தவுடன் செயலற்று ஓடப் போகின்ற வாடையாகிய ஒரு பொருளுக்கு உவமை
ஆகின்றனர்.]