"விரவியும் வரூஉம் மரபின என்ப". - 277
"உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை." - 278
"சிறப்பே நலனே காதல் வலியோடு
அந்நாற் பண்பும் நிலைக்களம் என்ப." - 279
"கிழக்கிடு பொருளோடு ஐந்தும் ஆகும்." - 280
"முதலும் சினையும் என்று ஆயிரு பொருட்கும்
நுதலிய மரபின் உரியவை உரிய." - 281
"சுட்டிக் கூறா உவமம் ஆயின்
பொருள்எதிர் புணர்த்துப் புணர்த்தனர் கொளலே." - 282