94

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "உவமமும் பொருளும் ஒத்தல் வேண்டும்."                        - 283 

    "பொருளே உவமம் செய்தனர் மொழியினும்
     மருளறு சிறப்பின் அஃது உவமம் ஆகும்."                       - 284 

    "பெருமையும் சிறுமையும் சிறப்பின் தீராக்
     குறிப்பின் வரூஉம் நெறிப்பாடு உடைய".                         - 285 

    "பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்
     வழிமருங்கு அறியத் தோன்றும் என்ப".                         - 294 

    "உவமப் பொருளின் உற்றது உணரும்
     தெளிமருங்கு உளவே திறத்திய லான".                          - 295 

    "உவமப் பொருளை உணருங் காலை
     மரீஇய மரபின் வழக்கொடு வருமே".                            - 296 

    "இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தே"                     -297 

    "வேறுபட வந்த உவமத் தோற்றம்
     கூறிய மருங்கின் கொள்வழித் கொளாஅல்".                     - 307 

    "ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே".                               - 308 

    "உவமத் தன்மையும் உரித்தென மொழிப
     பயனிலை புரிந்த வழக்கத் தான".                              - 309 

    "தடுமாறு உவமம் கடிவரை இன்றே."                             - 310 

    "அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே."                         - 311 

    "நிரல்நிறுத்து அமைத்த நிரல்நிறை சுண்ணம்
     வரைநிலை வைத்த மூன்றலங் கடையே".                        - 312 

    "உவமம்எனப் படுவது அவம் அற விரிப்பின்
     புகழே பழிப்பே நன்மைஎன்று இன்ன
     நிகழும் ஒப்புமை நேர்ந்தன முறையே".             - வீ. 96 உரை மே. 

     அவைதாம்,

    "கண்ணே செவியே மூக்கே நாவே
     மெய்யே மனமே விளம்பின ஆறினும்
     ஐயம் இன்றி அறுமூன் றாமே".                     - வீ. 96 உரை மே. 

     அவற்றுள்,