அணியியல் - உவமையணி்

95 

    "வடிவே வண்ணம் மொழிதன் மையென
     நொடிவ கண்ணின் நோக்கிய ஒப்பே".                - வீ. 96 உரை மே.

    "எழுத்தியல் ஒலியும் எழுத்தில் ஒலியும்என
     விழுத்தகு செவியின் வேண்டுஓப்பு இரண்டே"                 "

    "இனிய நாற்றமும் இன்னா நாற்றமும்
     துன்னிய மூக்கினில் தோற்றும் பண்பே".                      "

    "அறுவகைச் சுவையின் நாவின் ஒப்பே".                       "

    "நடுவு நிலைமை தண்மை வெம்மை
     அறிவு நிலைமை அன்மை விழுப்பம்
     நொப்பமும் அழுக்கும் செருசெருப்பு ஒன்பதும்
     ஒழிவரும் பெருமை உடம்பின் ஒப்பே"                       "

    "வினையும் பயனும் குலனும் குணனும்
     அளவும் நிறனும் எண்ணோடு எழுவகை
     பொறியின் ஆட்சியின் நெறியுற நாடலின்
     எய்திய வகைஅறிந்து இசைப்பது இயல்பே".                   "

    "மொழிந்த ஏழும் முதலும் சினையும்
     பண்பொட பத்தும் ஐவகை சேர்த்திக்
     கொண்டே கூறினர் குறிப்புணர்ந் தோரே".                    "

    "இல்பொருள் கேள்வி துணிவே உவமம்
     சொல்லிய நன்மையின் சொல்லும் துணிந்தோர்
     கருதப் படுவகை தெரிந்துநனி வெறாமை
     பொருளும் உறுப்பும் முதலாக் கூறினும்
     ஏற்புழி நோக்கி எச்ச மாக
     வாய்ப்பக் காட்டுக நூற்பொருள் வழக்கே".                    "

    "அவைதாம்,
     பாட்டின் பொருளொடு கூட்டித் தோன்றியும்
     பொருவரு வனப்பின் புனைந்துரை யாகியும்
     இருவகை இயல்பும் ஏற்ப வருமே".                           "

    "ஒப்பிக்கப் படுவது உவமமும் பொருளும்
     ஒப்புடைக் காதல் புகட்சிதன் உயர்பே".                       "