98

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "உபமே யத்தியல் உணர்த்திய பின்னர்
     உவமப் பொருளியல் உயர்த்தி முடித்தலும்
     கவின்அப் பொருட்உறின் கடிநிலை இலவே".                     - 100 

    "சிறப்பினும் வரூஉம் திறமுமொன் றுளதே".                        - 102 

    "அடையொடு பொருட்குஅடை புணர்க்குமஃ திரட்டை".             - 103 

    "உவமையும் உருபும் தொடர்வழிப் பிறிதுமொன்று
    உவமேயப் பொருட்கடை புணர்ப்ப தும்முள".                      - 104 

    "மரபினும் வருவதோர் மரபுடைத் தென்ப."                        - 105 

    "ஒத்தது வென்றதென்று ஒருபொருட்கு உவமை
     வைத்தன வாயொரு தொடர்பினும் வருமே"                      - 106 

    "ஏது நுதலிய முதுமொழி யினும்வரும்".                           - 107 

    "பிசியினும் புலப்படும் பெற்றிய தாகும்."                          - 108 

    "முக்கியப் பொருட்குமுக் கியப்பொருள் உவமை
     புணர்ப்பது முதன்மைப் புலனெறி வழக்கே".                     - 109 

    "உவமை என்பது உரிக்குணத் தொழிற்பயன்
     இவற்றொன்றும் பலவும் இணைந்து தம்முள்
     ஒப்புமை தோன்றச் செப்பிய அணியே".                - தொ. வி. 328 

    "இருபொருட்கு ஒப்புமை இயம்புவது உவமை".                   - ச. 4 

    "அதுவே, விரியே தொகையே எனஇரு வகைத்தாம்".                - 5 

    "வருணியம் அல்பொருள் வாசகம் தன்மைஇந்
     நான்கும் விரிதர நவில்வது விரியே".                            - 6 

    "மொழிந்த வருணியம் முதலிய நான்கனுள்
     ஒன்றும் பலவும் தொகுவது தொகை அஃது
     எண்வகைத் தாக இயலும் என்ப".                               - 7 

    "அல்பொருள் புனைவுளி யாகஓர் பொருளையே
     உரைப்பது பொதுநீங் குவமை என்ப."                            - 8 

    "வாக்கியம் இரண்டனுள் வருணியா வருணியம்
     மாறத் தொடுத்தல் புகழ்பொருள் உவமை".                        - 9 

    "இருபொரு ளுக்குத் தகுமொப் புமைவெளி யிட்டிலங்க
     வருவது உவமை அணியாம்."                                - குவ. 1